திருகோணமலை நீதிமன்ற வீதியில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் விடுதியொன்றினை நேற்று திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
பிராந்தியப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே குறித்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது மனையாவெளியை சேர்ந்த உரிமையாளர் (வயது 45) மற்றும் மூதூர் (வயது 22), வாழைச்சேனை (வயது 30), கந்தளாய் (வயது 27) ஆகிய இடங்களை சேர்ந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அவர்கள திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.