திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடைப்பட்ட இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேருநுவர, சோமபுர பகுதியைச் சேர்ந்த 24,28 மற்றும் 30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர.
சேருநுவர பகுதியில் நெல் கொள்வனவு செய்யும் ஒரு பகுதியினருக்கும், விவசாயிகளுக்கும், நெல் கொள்வனவு செய்யும் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பிரச்சினையாக உருவெடுத்ததாகவும் இரு குழுக்களுக்கிடையிலும் ஏற்பட்ட சண்டையில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.