பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 14000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பணம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 14,022 குடும்பங்களுக்காகவே இந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணி மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
குறித்த திட்டத்திற்கு 8,400 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்படவுள்ளதுடன், 60 தினங்களில் பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு, விஞ்ஞாபனத்திற்கமைவாக சகல குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.