தமிழகத்தில் ஒரே வீட்டில் கணவன் – மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி கரிகாலன் – முனியம்மாள்.
இவர்கள் தங்கள் மகள் குணவதியின் திருமணத்துக்காக பெற்ற 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை விற்றதாகக் கூறப்படுகிறது.
இருவரும் சேர்ந்து வீட்டை விற்றது குறித்து அறிந்து ஆத்திரம் அடைந்த அவர்களது மகன் அரிகரன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டுக்கு செல்ல இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கரிகாலன், முனியம்மாள் ஆகியோர் வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முனியம்மாளின் சகோதரரான மனவளர்ச்சி குன்றிய ஆறுமுகம் என்பவரும் உணவில் விஷம் கலந்துகொடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.