கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி தேர்தலின் ஒட்டக அணியின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அதிகாரத்தை காட்டுவதற்காக நிகழ்வுகளில் பங்கேற்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
அந்தவகையில் அவர் இலங்கையின் 72 ஆவது சுதந்திரதினமான நேற்று காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திரதின நிகழ்வில் தானே ஏற்பாடு செய்து தானே பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்க்ஷவின் பதவியேற்பு பொலனறுவையில் இடம்பெற்ற போது அங்கு சென்ற ஹிஸ்புல்லாவை யாருமே கண்டுகொள்ளாமல் அங்கிருந்து இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவால் துரத்தப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி இருந்தமை யாவரும் அறிந்த விடயம்…
இந்நிலையில் அவர் தற்பொழுது தனக்கு அதிகாரமிருப்பதாக காட்டிக்கொள்வதற்காக இவ்வாறான நிகழ்வுகளில் ஏற்பாடு செய்வதுடன் வரும் பாராளுமன்றத் தேர்லில் கோட்டாபயவிடம் தஞ்சம் அடைவதற்கான முன்னோட்டம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனாலும் முஸ்லீம் மக்களை அரவனைத்து செல்ல வேண்டும் என்பதில் அவதானமாக உள்ள ஜனாதிபதி கோட்டாபய அரசியல் வாதிகளான ஹிஸ்புல்லா மற்றும் இவர் போன்ற முஸ்லீம் அரசியல் தலைமைகளின் இரட்டை வேட நிலை தொடர்பில் உஷாராக இருப்பதாக மேலும் கூறப்படுகிறது.