இந்தியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குழுவினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியா செல்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் அவர்கள், இந்திய பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கிய இராஜதந்திரிகள் உட்பட பலரை சந்திக்க உள்ளனர்.
புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மஹிந்த மேற்கொள்ளும் இந்த விஜயத்தின் போது முக்கிய பல முடிவுகள் எடுக்கப்படுவதுடன் இருநாடுகளுக்கும் இடையிலான பல வர்த்தக, இராஜதந்திர ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி உதவிகள், எல்லை தாண்டிய மீனவர் விவகாரம் என்பன தொடர்பிலான தீர்வுகளுக்கு பிரதமர் மோடியிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த பௌத்தர்களின் முக்கிய வழிபாட்டு ஸ்தலமான புத்த கயா, திருப்பதி தேவஸ்தானம் ஆகிய இடங்களிற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.