யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளினை விடவும் மிகவும் உயர்வடைந்து காணப்படுவதாகவும் எனினும் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சற்றுக் குறைவடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 2016ஆம் ஆண்டில் 578பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அதில் 110பேர் உயிரிழந்தனர் .
அதேபோன்று கடந்த 2017ஆம் ஆண்டில் 579 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 59 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் காப்பற்றப்பட்டனர்.
2018ஆம் ஆண்டில் 582 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 150பேர் உயிரிழந்திருந்தனர்
அந்தவகையில் கடந்த 2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 105 பேர் உயிரிழந்தபோதும் ஏனையோர் காப்பாற்றப்பட்டனர்.
இதேவேளை, சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு. இருந்தபோதும் இவ்வாறு தவறான முடிவினை எடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.