யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் கல்விபயிலும் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களை பாடசாலை அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
வகுப்பறையில் ஆசிாியா் இல்லாத சந்தா்ப்பத்தில் வெளியே சென்று விளையாடியதற்காக மாணவர்களை அதிபா் இவ்வாறு தண்டித்துள்ளாா்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான 3 மாணவா்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் பெண் தலமைத்துவ குடும்பங்களை சோ்ந்தவா்கள் எனவும் கூறப்படுகின்றது.