கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் கொவிட் -19 என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு இப்போது கொவிட்-19 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் விட வைரஸ்கள் மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும்.
முதல் தடுப்பூசி தயாராக 18 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எனவே இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு கிடைக்கக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்தி வைரஸை எதிர்த்து தீவிரமாக போராட வேண்டும்.
இனியும் உலகம் விழித்துக்கொண்டு இந்த வைரஸை முதல் பொது எதிரி என்று கருதவில்லை என்றால், நாம் பாடம் கற்றுக்கொண்டோம் என நான் நினைக்கவில்லை.
புவியியல் இருப்பிடம், விலங்கு,தனிநபர் அல்லது மக்கள் குழுவைக் குறிக்காத ஒரு பெயரை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, மேலும் இது உச்சரிக்கக்கூடியது மற்றும் நோயுடன் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும்.
புதிய பெயர் கொரோனா, வைரஸ் மற்றும் டிசிஸ் (நோய்) ஆகிய சொற்களிலிருந்து எடுக்கப்பட்டது, 19 என்பது 2019 ஆம் ஆண்டைக் குறிக்கும். கொரோனா வைரஸ் குறித்து 2019 டிசம்பர் 31 அன்று உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது சீனா முழுவதும் 42,200 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை 2002-2003ல் சார்ஸ் தொற்றுநோயை விட அதிகரித்துள்ளது.