ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்றைய தினம் கண்டி, தெல்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு வீதிகள் புனரமைப்பு அவசியம் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் 12,380 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் வருபவையாகும்.
16,000 கிலோமீற்றர் வீதிகள் மாகாணசபையின் கீழ் வரும் வீதிகளாகும். இதனை தவிர மாற்று வீதிகளும் இந்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.
கொழும்பு, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் உள்ள வீதிகளே இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.