மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிருப்பு வசந்த புரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பேசாலை பொலிஸ் நிலைய விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் 205 கிலோ 44 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
அதோடு, சம்பவம் தொடர்பில் பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.


















