கொரோனா வைரஸின் தாக்குதலானது ஸ்பெயினில் தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று 5,753 பேரை தாக்கியிருப்பதாக ஸ்பெயினில் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அதிலும் பாதிபேர் தலைநகர் மாட்ரிட்டில் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 10,000 ஐ எட்டக்கூடும் என்று ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நோய்த்தொற்றுகள் அதிகரிப்பால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஸ்பெயினின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க உத்தரவின் வரைவின் படி, மக்கள் உணவு மற்றும் மருந்து வாங்க, வேலைக்குச் செல்ல, மருத்துவ மையங்கள் மற்றும் வங்கிகளுக்குச் செல்ல, அல்லது இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் கவனிப்பு தொடர்பான பயணங்களை மேற்கொள்ள மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த விதிகள் திங்கள் கிழமை காலை 8:00 மணியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.