கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவதா, இல்லையா, என்பது குறித்து ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் முடிவு செய்யப்படும் என பொது விமான சேவைகள் அதிகார சபை இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் நடந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், இரண்டு வாரங்களுக்கு விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.