நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை ஆயுதப்படை காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவரை ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியேற்ற ஆயுதப்படை காவலர்கள் இரவு நேரத்தில் முயற்சி செய்தனர்.
ஆனால் மீண்டும் மீண்டும் ரயில்வே நிலையத்திற்கு உள்ளேயே அந்தப் பெண் சென்றதால் ஆயுதப் படையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற காவலர் கையில் இருந்த லத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கினார்.
இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர். குறித்த காட்சி தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணை தாக்கி மண்டையை உடைத்த ரயில்வே துறை pic.twitter.com/zI7yo9Sx7r
— NvtvThiagarajan (@NvtvT) March 16, 2020