கொரோனா வைரஸ் உலகில் முதன் முதலில் எப்போது மற்றும் எப்படி தோன்றியது என்பது தெரியவந்துள்ள நிலையில் அது தொடர்பில் சீனா பல விடயங்களை மறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய வைரஸ் தற்போது உலகம் முழுக்க 170க்கும் அதிகமான நாடுகளில் பரவி இருக்கிறது .
இந்த வைரஸ் குறித்து சீனா நினைத்து இருந்தால், டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே உலகை எச்சரித்து இருக்க முடியும். ஆனால் சீனா அதை செய்யவில்லை. இந்த வைரஸ் எப்போது தோன்றியது, எப்படி பரவியது என்ற முழு விவரங்களும் தற்போது வெளியாகி உள்ளது.
பலரும் நினைப்பது போல கொரோனா வைரஸ் ஜனவரி மாதத்தில் உலகில் தோன்றவில்லை. இந்த வைரஸ் சீனாவின் உள்ள வுஹன் நகரில் டிசம்பர் 1ம் திகதி 2019 லேயே தொடங்கிவிட்டது. 53 வயது நபர் ஒருவருக்கு இந்த வைரஸ் தோன்றியது.
சீனாவின் வுஹனில் உள்ள கடல் உணவகம் தொடர்பான மார்க்கெட் ஒன்றின் மூலம் வைரஸ் பரவியது என்று கணிக்கப்படுகிறது. இந்த நபருக்கு கொரோனா வந்த 4 நாட்களில் இவரின் மனைவிக்கும் கொரோனா தாக்கியது.
ஆனால் அப்போது இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்று யாருக்கும் தெரியாது. அதி தீவிர காய்ச்சல் என்றுதான் கூறப்பட்டது. மருத்துவமனையிலும் கூட, இவர்கள் மற்ற நோயாளிகள் உடன்தான் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த வைரஸ் குறித்து முதலில் யாருமே கணிக்கவில்லை.
அதன்பின் டிசம்பர் இரண்டாம் வாரத்தில்தான் இந்த வைரஸ் வேகம் எடுக்க தொடங்கியது. அங்கு வரிசையாக அருகருகே இருக்கும் மருத்துவமனைகளில் பலர் கொரோனா பாதிப்போடு வந்து சேர்க்கப்பட்டனர்.
கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது என்று சீனா கூறியது. சீனாவின் நாளிதழ்களில் இதே உறுதியான செய்தி வந்தது. மிக மோசமான காய்ச்சல் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் சீனா கூறியது. ஏன் உலக சுகாதார மையம் சீனாவில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எந்த நோயும் பரவவில்லை. கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது இல்லை என்று டிவிட் செய்து இருந்தது.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நிறைய திருப்பங்கள் நடந்தது. ஜனவரி 8ம் திகதி இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் ஆதாரம் இல்லை என்று சீனா கூறியது. ஆனால் ஜனவரி 11ம் திகதி சீனாவில் முதல் நபர் இதனால் பலியானார். 61 வயது முதியவர், சீன மார்க்கெட் ஒன்றுக்கு சென்ற பின் வைரஸ் தாக்கி பலியானார்.
இன்னொரு பக்கம் இந்த வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டருக்கு கொரோனா வந்தது. ஜனவரி 10ம் திகதி லி வென்லியாங் காய்ச்சல் வந்து படுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அதன்பின் பிப்ரவரி 7ம் திகதி கொரோனா வைரஸால் இவர் தாக்கப்பட்டு பலியானார். இவரை தற்போது சீன மக்கள் தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.
அதன்பின் ஜனவரி 13ம் திகதி இந்த வைரஸ் சீனாவிற்கு வெளியே தாய்லாந்தில் உள்ள சீன பெண் ஒருவருக்கு கொரோனா வந்தது. இவர் அந்த மீன் மார்க்கெட் சென்றது இல்லை. ஆனாலும் வேறு யார் மூலமோ இந்த வைரஸ் அவருக்கு பரவி உள்ளது. இவர் வுஹனில் இருக்கும் வேறு சில மார்க்கெட்டுக்கு சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி இந்த வைரஸ் அவரை தாக்கி இருக்கலாம்.
ஜனவரி 15ம் திகதி தான் சீன அரசு கொரோனா வைரஸ் தாக்குதலை ஒப்புக்கொண்டது. அதோடு இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் அப்போதே சீனாவில் 100 பேருக்கும் அதிகமாக இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்னும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருந்தது.
அதன்பின்தான் இந்த வைரஸின் தீவிர தன்மையை சீனா உணர்ந்தது. ஜனவரி 22ம் திகதி தான் சீனா வுஹனில் இறங்கி சோதனை செய்தது. அதன்பின்தான் சீனா வுஹன் நகரை மூடியது.
சரியாக வைரஸ் தோன்றி ஒன்றரை மாதம் கழித்துதான் அதன் வீரியத்தை சீனா உணர்ந்தது. அதன்பின்தான் சீனா இந்த வைரஸ் பரவல் குறித்து ஒப்புக்கொண்டு, வுஹன் நகரத்தை மூடியது. அதுவரை சீனா அனைத்தையும் மறைத்தது.
இதோடு ஹூபேய் மருத்துவ குழு உடனடியாக வுஹன் சென்று அதுவரை ஆராய்ச்சிகளுக்காக அங்கு மருத்துவர்கள் சேர்த்து வைத்து இருந்த கொரோனா மாதிரிகளை அழித்தது.
ஆம் நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்கள் எடுத்து வைத்து இருந்த கொரோனா மாதிரிகளை எல்லாம் அந்த குழு மொத்தமாக அழித்ததும் உறுதியாகியுள்ளது.