• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்?

Editor by Editor
April 1, 2020
in உலகச் செய்திகள்
0
கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ‘உலகின் பொலீஸ்காரன்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா, கொரோனா முன்னால் கதிகலங்கி நிற்பதைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். உண்மையில், ட்ரம்ப் அரசின் தவறான முடிவுகள்தான் இந்த நிலைக்குக் காரணம்.

ஆரம்பம் முதலே அலட்சியம்
ஜனவரி 20-ல், சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்கா – சீனா இடையிலான முக்கியமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து பெயரளவில் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தது அமெரிக்கா. அதைத் தாண்டி, கொரோனா ஏற்படுத்தப்போகும் பேரழிவு தொடர்பான முன்னெச்சரிக்கை உணர்வு ட்ரம்ப் அரசிடம் இருக்கவில்லை.

கோவிட் -19 பாதிப்பு குறித்த போதிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப, அமெரிக்க அரசு அதிகாரிகள் தவறிவிட்டார்கள்.

இத்தனைக்கும், கொரோனா வைரஸ் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் குறித்த தகவல்களை ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே ட்ரம்ப் அரசுக்கு அமெரிக்க உளவுத்துறை அளித்துவிட்டது.

ஆனால், “நிலைமை முற்றிலுமாகக் கட்டுக்குள் இருக்கிறது. சீனாவிலிருந்து வந்த ஒருவருக்குத்தான் கொரோனா இருக்கிறது. மற்றபடி எல்லாம் நலமே” என்கிற ரீதியில் பேசிவந்தார் ட்ரம்ப்.

அதிகாரமும் பிடிவாதமும்
சரியோ தவறோ, ட்ரம்ப் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்றால், அதில் இறுதிவரை பிடிவாதம் காட்டுவார் என்பது அமெரிக்கர்கள் நன்கு அறிந்த விஷயம்தான்.

தான் சொல்வதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத அதிகாரிகளையே தன்னைச் சுற்றி அமர்த்திக்கொண்டிருப்பவர் அவர். அவர்களும் ட்ரம்ப் போலவே சிந்திப்பதால், விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் விஷயங்களைத் திருத்திக்கொள்ள அரசுத் தரப்பு விரும்புவதே இல்லை.

குறிப்பாக, கொரோனா விஷயத்தில் சுகாதாரத் துறை நிபுணர்களின் எச்சரிக்கையை ட்ரம்ப் அரசு நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை. இதன் விளைவை அமெரிக்க மக்கள்தான் இன்றைக்கு எதிர்கொள்கிறார்கள்.

கோவிட் – 19 பாதிப்பால் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்கள் அவசியம்.

ஆனால், மார்ச் 15 நிலவரப்படி, கையிருப்பில் வெறும் 12,700 வென்ட்டிலேட்டர்கள் மட்டுமே இருப்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

ஆனால், நம்மிடம் போதுமான வென்ட்டிலேட்டர்கள் இருக்கின்றன என்று துணை அதிபர் மைக் பென்ஸ் சமாதானம் சொன்னார்.

எனினும், எத்தனை வென்ட்டிலேட்டர்கள் இருக்கின்றன என்று அவர் சொல்லவே இல்லை. தவிர, வென்ட்டிலேட்டர்களை விநியோகிக்கும் விஷயத்தில் பல மாநிலங்களின் ஆளுநர்களுடன் மோதல் போக்கை அதிபர் ட்ரம்ப் கடைப்பிடித்தார்.

பல மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக, அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், “நம்மிடம் விரைவில் மருத்துவ உபகரணங்கள் உபரியாகவே இருக்கும்.

அவற்றை இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அனுப்ப முடியும்” என்று பேசிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா எட்டிப்பார்த்த ஆரம்பக் கட்டத்தில், வென்ட்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை டன் கணக்கில் சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்திருக்கும் விஷயம் வெளியாகியிருக்கிறது.

அதிகரிக்கும் மரணங்கள்
இப்படிப் பொறுப்பில்லாமல் ட்ரம்ப் அரசு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் நிலைகுலைய வைத்திருக்கிறது.

மார்ச் 28 கணக்கின்படி, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில், உலகிலேயே முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

பலி எண்ணிக்கையில், உலகிலேயே ஆறாவது இடம் அந்நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. மார்ச் 30-ல், அமெரிக்காவில் கரோனா மரணங்களின் எண்ணிக்கை, 3,100-ஐக் கடந்தது. 2001 செப்டம்பர் 11-ல் உலக வர்த்தக மையக் கட்டிடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைவிட இது அதிகம். இன்றைய தேதிக்கு 1.60 லட்சம் அமெரிக்கர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

2 லட்சம் மரணங்கள் ஏற்படும்
எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் பரவலைக் கவனிக்க என்றே அரசால் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிர்க்ஸ், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயலாற்றினாலும்கூட, கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று எச்சரித்திருப்பது அமெரிக்கர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இன்றும்கூட, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை பெரிய பிரச்சினை அல்ல என்று பேசி வருகிறார் ட்ரம்ப்.

ஆனால், கள நிலவரம் வேறு என்று வாதிடுகிறார்கள் பல மாநில ஆளுநர்கள். சொல்லப்போனால், பிப்ரவரி இறுதிவரை கூட கொரோனா பரிசோதனை விஷயத்தில் ட்ரம்ப் அரசு மிகுந்த அலட்சியத்துடன்தான் நடந்துகொண்டது.

கொரோனா பரிசோதனைக்காக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention- CDC) உருவாக்கிய உபகரணங்கள் குறைபாடு கொண்டவை என்று தெரியவந்தது.

ஆனாலும், அந்த உபகரணங்களைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்பு காட்டியது ட்ரம்ப் நிர்வாகம்.

சுகாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்த பின்னரே, பொதுச் சுகாதார நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து, மேம்படுத்தப்பட்ட பரிசோதனை உபகரணத்தை உருவாக்கலாம் எனும் முடிவுக்கு ட்ரம்ப் அரசு வந்தது.

இன்னமும் இவ்விஷயத்தில் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் புலம்புகிறார்கள்.

மேலும் சறுக்கல்கள்
ஏற்கெனவே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, போதுமான சமூக விலக்க நடவடிக்கைகளை ட்ரம்ப் அரசு எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்படும் நிலையில், அந்நடவடிக்கைகளை மேலும் குறைக்கவே விரும்புவதாகப் பேசினார் ட்ரம்ப்.

சமூக விலக்கத்தால் கொரோனா பரவலைவிட அதிக மரணங்கள் ஏற்படும் என்றே அவர் பேசிவந்தார். எனவே, ஒரு சில வாரங்களிலேயே அமெரிக்காவின் தொழில் நிறுவனங்கள் திறக்கப்படும் என்றார்.

ஆனால், அப்படிச் செய்வது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பைத்தான் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.

இன்றைக்கு, கொரோனா வைரஸ் அமெரிக்காவின் பல மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவரே, ஏப்ரல் 30 வரை சமூக விலக்கத்தைத் தொடர்வது என்று முடிவெடுத்திருக்கிறார். இன்றைய திகதிக்கு, அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் வீட்டில் அடைபட்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளை மாளிகை முன்பு தினமும், கொரோனா வைரஸ் பரவல் குறித்துப் பேசி வரும் ட்ரம்ப், இவ்விஷயத்தில் தனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற, கேள்வி கேட்கின்ற பத்திரிகையாளர்களை வெளிப்படையாகவே கடிந்துகொள்கிறார்.

“விமர்சனபூர்வமான கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, அரசுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் நீங்கள்” என்று பிபிஎஸ் எனும் செய்தி ஊடகத்தின் நிருபரிடம் கண்டிப்புடன் கூறியிருக்கும் ட்ரம்ப்புக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஆரம்பத்திலிருந்தே கொரோனா விஷயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ‘வல்லர’சின் நிலை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்பதுதான் ட்ரம்ப் அரசின் நிர்வாகக் குறைபாடுகள் உலகுக்குச் சொல்லும் பாடம்!

Previous Post

பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரிப்பு….

Next Post

ரஷ்யா ஜனாதிபதி புடினுடன் கைகுலுக்கிய தலைமை மருத்துவருக்கு கொரோனா உறுதி.! வெளியான தகவல்!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
ரஷ்யா ஜனாதிபதி புடினுடன் கைகுலுக்கிய தலைமை மருத்துவருக்கு கொரோனா உறுதி.!  வெளியான தகவல்!

ரஷ்யா ஜனாதிபதி புடினுடன் கைகுலுக்கிய தலைமை மருத்துவருக்கு கொரோனா உறுதி.! வெளியான தகவல்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025

Recent News

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy