கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் பேருவளை பகுதியில் நோயாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக அந்த பகுதியிலிருந்து இதுவரை 15 தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களில் 49 குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி எதிர்வரும் சில நாட்களில் ஏனைய தேவைகளுக்காக வீதிகளில் பயணிக்க கூடாது என பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வாறனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.