இலங்கையில் 100 வீதம் கொரோனா வைரஸை ஒழித்துவிடாமல் பொதுத் தேர்தலை நடத்துவது பாரிய அழிவுக்கு இட்டுச்சென்றுவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த ஆட்கொல்லி வைரஸைக் கட்டுப்படுத்த நிதி தேவை என்றால் உடனே நாடாளுமன்றத்தைக் கூட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் எனக்கூறிய மங்கள, அதைவிடுத்து, மக்களின் உயிர்களை வைத்து பொதுத் தேர்தலை செய்ய எனக்கு உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டார்.