கொரோனா பாதித்த பகுதிக்குள் இறங்கி பிரபல நடிகை ரோஜா கிருமி நாசினி தெளித்துள்ளார்.
கொரோனா பாதித்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்க அஞ்சியதால் பிரபல நடிகை அந்த பணியை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜாவின் தொகுதியில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை அறிந்த ரோஜா அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டார்.
ஆனால் கொரோனா பயத்தால் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்க அஞ்சியதால், ரோஜா தானே களத்தில் இறங்கி பாதுகாப்பு கவசங்களுடன் கிருமி நாசினி தெளித்தார். அப்பகுதி முழுவதும் அவர் கிருமி நாசினி தெளித்தார். ரோஜாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.



















