கொரோனா ஆப்பிரிக்காவை சூறையாட அனுமதித்தால், அது நான்கு முறை அமெரிக்காவையும் ஐரோப்பாவையுமே திருப்பித்தாக்கும் என உலக சுகாதார அமைப்பைச் சார்ந்த நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பொது சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநரான பேராசிரியர் Lawrence Gostin, ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவ விடப்படுமானால், அது மூன்றாவது நான்காவது முறை கூட அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் தாக்கும் என்று கூறியுள்ளார்.
கொரோனா ஆப்பிரிக்க நாடுகளையும் ஒருவேளை இந்திய துணைக்கண்டத்தையும் கூட தாக்கவிருக்கிறது என்று கூறியுள்ளார் அவர்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டால்கூட, உலகின் பிற பகுதிகளில் கொரோனா பரவுமானால், பின்னிப்பிணைந்துள்ள இந்த சமுதாயத்தில் நாம் வாழும் நிலையில், கொரோனா மீண்டும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் திரும்பி வரும் என்கிறார் அவர்.
வருவாய் குறைந்த நாடுகளில் கொரோனா கட்டவிழ்க்கப்படுமானால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், இரண்டாவது,மூன்றாவது ஏன் நான்காவது முறை கூட கொரோனா பரவலாம் என்றார் அவர்.