தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர், தன்னம்பிக்கையும், மூச்சுப் பயிற்சியும் இந்த நோயில் இருந்து குணமடைய முக்கியமானவை என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி (62) என்பவர் மதுரையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய அவர் இந்த நோயில் இருந்து மீண்டது குறித்து கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி காய்ச்சல் இருந்தது. உடனடியாக மாத்திரை சாப்பிட்டேன்.
இருப்பினும் காய்ச்சல் குறையாத காரணத்தினால், ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே, ரத்த பரிசோசதனை செய்தேன். ஆனால் அதில் எந்த அறிரிகுறியும் தெரியவில்லை. காய்ச்சல் மட்டும் தொடர்ந்து அதிகமாக இருந்தது. 104 டிகிரி வரை காய்ச்சல் இருந்தது.
சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது நுரையீரலில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு மார்ச் 27-ஆம் திகதி அனுப்பிவைத்தனர். அப்போது, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து 13 நாட்கள் சிகிச்சை பெற்றேன். கடந்த 10-ஆம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிந்தது. அதன்பின் பூரண குணமடைந்து வீடு திரும்பினேன்.
காய்ச்சல் இருந்தால் அதை சாராதணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கரோனா வைரஸ் பாதித்ததால் நுறையீரல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. தன்னம்பிக்கையுடன் இருந்ததால் பாதிப்பு தெரியவில்லை.
நோய் பாதித்தால் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இருந்தால் நோயிலிருந்து வெளிவரலாம். அதோடு, மூச்சுப் பயிற்சியும் யோகாசனமும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி செய்ததால் விரைவில் குணமடைய வாய்ப்பு ஏற்பட்டது.
குடும்பத்தினரும் நண்பர்களும் தொலைபேசி மூலம் ஊக்கம் அளித்தனர். கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் சமுதாய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மருத்துவர்கள் கூறுவதையும், அரசு வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.