சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், போராட்டத்தில் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்து வீட்டிக்குள்ளேயே முடங்கியுள்ளனர். வீட்டில் எந்த வேலையும் இல்லாத நிலையில் கணவன், மனைவிக்குள் குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது.
அதேபோல், ஆணுறை விற்பனைகளும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது வேதனையை வெளிப்படுத்தி ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது, கொரோனாவில் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நான் கவலையற்ற ஒரு சர்வதிகாரியிடம் மாட்டிக்கொண்டேன். ஊரடங்கு எப்போது முடியும் கணவரை எப்போது வேலைக்கு அனுப்புவது என்பது தெரியவில்லை. அரசாங்கம் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், வீட்டில் உள்ள கணவர்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
என் கணவர் எப்போதும் உறவு கொள்ளும் மூடுலேயே இருக்கிறார். அவரது பாலியல் சேர்க்கையால் நான் அடிக்கடி மயக்கம் அடைந்து விடுகிறேன். அவர் தூங்குவதே இல்லை. வீட்டில் சமைத்து வைத்தால் நன்றாக சாப்பிடுகிறார். டிவி பார்ப்பார்.
சிறிது நேரத்தில் மீண்டும் அவருக்கு உறவு வைத்துகொள்ள தேவைப்படுகிறது. ஊரடங்கால் எனது ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை.
மேலும், என் கணவர் அடிக்கடி என்னுடன் பாலியல் உறவு கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனநிலை கெட்டுவிட்டது. வேதனையுடன் மனமுடைந்த நிலையில் இருந்த நான், வீட்டிலிருந்து ஓடிவந்து ஓரிடத்தில் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்து விட்டேன்.
எனவே அரசாங்கம் விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அந்நாட்டு அதிபருக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.




















