மத்தியபிரதேசத்தில் பார்வையற்ற 53 வயது பெண்ணை மர்மநபர் ஒருவர், பால்கனி வழியாக எகிறி குதித்து வந்த பாலியல் பலாத்காரம் செய்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வங்கி ஒன்றில் மேனேஜராக பணிபுரியும் இப்பெண்ணின் கணவர், ராஜஸ்தான் மாநிலத்தில் லாக்டவுனால் சிக்கியுள்ளார். இதனால் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அதிகாலை மர்ம நபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், குறித்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வர ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் வருவதை அவதானித்த மர்மநபர் குறித்த பெண்ணிடமிருந்து மொபைல் போனை மட்டும் பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். அவ்வளவு பாதுகாப்பினை மீறி குறித்த அபார்ட்மெண்டில் எவ்வாறு நுழைந்தார் என்பது தெரியாமல் பொலிசார் குழம்பி வருகின்றனர்.
குறித்த நபர் படிக்கட்டு வழியாக ஏறித்தான் 2வது தளத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்குள் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாலும், பால்கனி வழியாக நுழைந்து உள்ளே குதித்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகப்படுகிறார்கள்.
தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில், லாக்டவுன் சமயத்திலும் இப்படியொரு கொடுமையான நிகழ்வா என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.