முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவிப் பகுதியில் தண்ணீர்தொட்டியில் வீழ்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் மல்லாவி, வளநகர் மேற்கு 5ஆம் யுனிட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் , இராகுலன் துசானி என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாவி பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மரண விசாரணை அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.



















