ஹட்டன் பொலிஸ் பிரிவின் டிக்கோயா தரவல எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை தோட்டத்திலிருந்து வலையில் சிறுத்தை சிக்கிய நிலையில், பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டது. உடனடியாக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
ஹட்டன் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சிறுத்தை புலியை மீட்க, கால்நடை மருத்துவரின் உதவியை நாடியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம், மஸ்கெலியாவில் உள்ள காட்மோர் தேயிலைத் தோட்டத்தின் தம்பத்தேன பகுதியில் ஒரு சிறுத்தைப் புலி வலையில் சிக்கிய நிலையில் மரத்தில் ஏறியது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்ட போதும், 8 மணித்தியாலங்களாக வலையில் அழுத்தியிருந்ததால் அதன் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, சிறுத்தை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.