பிரான்சில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், நிக்கோட்டின் கொரோனா தாக்குவதிலிருந்து பாதுகாக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
ஆகவே, கொரோனாவைத் தடுக்கவும், குணமாக்கவும், நிக்கோட்டினைப் பயன்படுத்தமுடியமா என்பதை அறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பாரீஸில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்று, 343 கொரோனா நோயாளிகளையும், குறைந்த அறிகுறிகள் கொண்ட 139 பேரையும் ஆய்வு செய்ததையடுத்து இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
அவர்களில் 35 பேர் மட்டுமே புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள்.
இதே போன்றதொரு ஆய்வு, சீனாவில் சென்ற மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,000 பேரில் 12.6 சதவிகிதத்தினர் மட்டுமே புகைப்பிடிப்பவர்கள் என்ற விடயத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அதாவது, புகைப்பிடிப்பவர்களில் குறைந்த சதவிகிதத்தினர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்கள்.
புகைப்பிடிப்பவர்கள் உடலில் உள்ள செல்களின் மீது நிக்கோட்டின் அமர்ந்து கொள்வதால், வைரஸ் செல்கலூக்குள் நுழைவதை அது தடுத்துவிடுவதாக கருதப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள, சுகாதாரத்துறையினரின் ஒப்புதலுக்காக இந்த ஆய்வாளர்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த ஆய்வு மக்களை புகைப்பிடிக்கத் தூண்டுவதற்காக அல்ல என்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஏனெனில், பிரான்சில் புகைப்பிடிப்பதால் ஆண்டொன்றிற்கு 75,000 பேர் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.