• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

புனித ரமழானில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்! பைஸர் முஸ்தபா!

Editor by Editor
April 25, 2020
in இலங்கைச் செய்திகள்
0
புனித ரமழானில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்!  பைஸர் முஸ்தபா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புனித ரமழானில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அசாதாரண சூழ்நிலையில் அடுத்தவருக்கு முன்னோடியாக எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெளிவூட்டல் ஒன்றை வழங்கியுள்ளார்.

“முஸ்லிம்கள் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடப்பவர்கள். அவர்கள் வீண் சண்டைக்கும் வம்புக்கும் செல்லாதவர்கள்” என்ற மனோபாவம், அனைவரினது உள்ளங்களிலும் வருமளவுக்கு, இப்புனித ரமழானில் கண்ணியமாகவும், நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்துரை வழங்கியுள்ளார்.

புனித ரமழான், மகத்துவமிக்க மாதம். இந்த மாதத்தில் குறிப்பாக, கொழும்பு வாழ் மக்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் நிறையவே உள்ளன. கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ளது.

இதில் கொழும்பு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, நாம் பொடுபோக்காக நடந்து கொள்ளக் கூடாது. எந்தத் தீர்மானங்களையும் அவசரமாக எடுத்துவிடவும் கூடாது.

“லொக்டவுன்” செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களும் கூட மிக அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே செல்லக்கூடாது.

கட்டுப்பாடுகளைப் பேணி, விட்டுக்கொடுப்பு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அரச, பாதுகாப்பு, சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய நாம் எம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விசேடமாக, ரமழான் காலங்களில் இரவு வேளைகளில் இளைஞர்கள், சிறுவர்கள் எந்தவித வீண் விளையாட்டுக்களிலும் ஈடுபடாமல் இருப்பது, நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி முறையாகும். இயன்றவரை, தனிமையாகவே இருந்து கொள்வதே எமக்கும் அடுத்தவர்களுக்கும் மிக்க நல்லது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் எமக்கு ஐந்தாவது தடவையாகவும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை தவறிப்போய்விட்டது. பள்ளிவாசல்கள் யாவும் ஐவேளைத் தொழுகைக்காக மூடப்பட்டுள்ளன. பிள்ளைகளின் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்புனித ரமழானில் ஜும்ஆத் தொழுகையை மீண்டும் தருமாறும், பள்ளிவாசல்களைத் திறந்து தருமாறும், பாடசாலைகளை ஆரம்பித்துத் தருமாறும், வல்லவன் இறைவனிடம் துஆப் பிரார்த்திப்போமாக.

அத்துடன், ரமழானில் தவறாமல் செய்ய வேண்டிய அமல்களிலும் நாம் கண்ணுங்கருத்துமாக இருந்துகொள்ள வேண்டும்.

வீண் பேச்சுகள், தேவையில்லாத தர்க்கங்கள் போன்றவற்றை இயன்றளவு தவிர்த்து, அதிகமான நேரங்களில், உடல் சோர்வாக உள்ள நேரங்களில் தஸ்பீஹ் மற்றும் இஸ்திஃபார் செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய அசாதாரண சூழ்நிலையில், இயன்ற வரை குடும்பத்துடன் நோன்பு திறப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, ஆண்கள் இந்த கண்ணியமான மாதத்தில் தனது அலுவல்களை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் நோன்பு திறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

நோன்பு திறக்கும் நேரம் மிகவும் பெறுமதியான நேரம் என்பதால், அந்த கண்ணியமான நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும்.

உலக மனிதர்கள் அனைவரையும் எங்களுடைய துஆக்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கொரோனா தொற்றினால் இன்னல் துன்பங்களில் துவண்டு கொண்டிருப்பவர்கள் அத்துடன், உடல் நலமின்மையால் அவதிப்படுபவர்கள், கடன் துன்பங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், திருமணமாகாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆண், பெண் பிள்ளைகள் உட்பட அனைவருக்காகவும், நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழவும், நலமும் வளமும் பெறவும் துஆச் செய்ய வேண்டும்.

அத்துடன், கொரோனா தொற்று நம் நாட்டிலிருந்து விரைவில் நீங்கவும், இந்த பேராபத்திலிருந்து அனைவரும் விடுபடவும் நாம் கையேந்திப் பிரார்த்திக்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், புனிதமான இந்த ரமழானில் நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, நம்முடைய அனைத்து அமல்களையும் ஏற்றுக் கொண்டு இவ்வுலகிலும், மறுமையிலும் நம்முடைய வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் வழங்கி அருள்பாளிப்பானாக! இயன்றவரை தனிமையாக இருப்போம்! கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வோம்.

Previous Post

அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி இத்தாலியில் வீடொன்றில் விருந்து வைத்த இலங்கையர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

Next Post

கொவிட் – 19 வைரஸ் பரவல் குறித்து சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்

Editor

Editor

Related Posts

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு
இலங்கைச் செய்திகள்

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
Next Post
கொவிட் – 19 வைரஸ் பரவல் குறித்து சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்

கொவிட் - 19 வைரஸ் பரவல் குறித்து சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025

Recent News

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy