ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவில் குடியிருப்பு கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஷார்ஜாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு குடியிருப்பு கோபுரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
ஷார்ஜா உள்ளுர் பாதுகாப்பு குழுக்களின் விரைவான நடவடிக்கையால் பெரிய பேரழிவைத் தவிர்க்கப்பட்டது. தீக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்த தீ விபத்தில் காயமடைந்த 12 பேரில், ஐந்து பேர் புகை மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் 7 பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர்.
ஆரம்ப அறிக்கைகள், இரவு 9.04 மணிக்கு அப்கோ கோபுரத்தின் 10 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது, உறைப்பூச்சு காரணமாக விரைவாக மேலே பரவியதாக கூறப்படுகிறது.
https://twitter.com/abdul_salam_98/status/125781301651234816238
குடியிருப்பு தளங்கள், சேவைகளுக்கான இரண்டு தளங்கள் மற்றும் ஒன்பது கார் பார்க்கிங் தளங்கள் ஆகியவற்றைக் கொண்ட 49 மாடி கட்டிடத்திலிருந்து குத்தகைதாரர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒவ்வொரு தளத்திலும் 12 குடியிருப்புகள் என மொத்தம் 456 குடியிருப்புகள் உள்ளன.
#sharjahfire has cooled down #Drones are monitoring the current situation .. pic.twitter.com/7LizDInfQC
— Alex Pavan – A Prototype to Win ! (@AlexPavan13) May 5, 2020
தீயணைக்கப்பட்ட நிலையில் கட்டிடம் காலியாக உள்ளதா என்பதை கண்காணிக்க பொலிசார் ட்ரோனைப் பயன்படுத்தியதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.