முன்னாள் சபாநாயகரும், அரசியலமைப்புச் சபைத் தலைவருமான கரு ஜயசூரிய, வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை அரசியலமைப்புச் சபையை கூட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக அவர் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.
குறித்த தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொதுத் தேர்தல் நெருக்கடிகள் பற்றி ஆராயப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.