திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹ்ரூப் நகர்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31,மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா வெள்ளை மணல் பகுதியில் வைத்து ஒருவரிடம் 1500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும்,மற்றொருவரிடம் ஒரு கிராம் போதைப் பொருளும் வைத்திருந்த நிலையில் கிண்ணியா போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.