வடமராட்சி கிழக்கு விவசாயிகளுக்கு கடற்ப்படையினர் வயறினால் சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று தோட்ட வேலைகளுக்காச் சென்று வீடு திரும்பிக் கொணரடிருந்தோரை வழி மறித்த வடமராட்சி கிழக்கில் உள்ள கடற்ப்படையினர் எதுவுமே கேட்காது வயறினால் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு இரவு ஊரடங்கு அமுலாகும் 8 மணிக்கு முன்னர் வீடுகளுக்குச் செல்வதற்காக உழவியந்திரம் மற்றும் உந்துருளி, துவிச்சக்கர வண்டிகளில் இரவு 07:30 மணியளவில் பயணித்தவர்களுக்கே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாமுனை மற்றும் செம்பியன் பறரறுப் பகுதிகளிலேயே கடற்ப்படையினர் தாக்கியுள்ளனர்.




















