• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

மனைவியை பாம்பைவிட்டு கொலை செய்த கொடூர கணவன்!

Editor by Editor
May 28, 2020
in இந்தியச் செய்திகள்
0
மனைவியை பாம்பைவிட்டு கொலை செய்த கொடூர கணவன்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் கேரளாவில் இளம் பெண் உத்ராவை அவரின் கணவர் சூரஜ் பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து கொலை செய்தமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

உத்ராவுக்கும் சூரஜுக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், கார் என நல்ல வரதட்சணை கொடுத்துள்ளனர். எனினும் உத்ராவிடம் குறை கண்டுபிடித்த சூரஜ் சத்தமே இல்லாமல் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பாம்பு பிடிக்கும் சுரேஷ் என்பவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து பாம்புகளை வாங்கி மனைவியை கொலை செய்துள்ளார்.

முதலில் அணலி பாம்பை வாங்கியுள்ளார். அந்தப் பாம்பு மார்ச் 2 ஆம் திகதி உத்ராவை கடித்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக தாய் வீட்டில் இருந்தார் உத்ரா.

இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி பிளாஸ்டிக் போத்தலில் கருமூர்க்கன் வகை பாம்புடன் உத்ராவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சூரஜ். அன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த உத்ரா மீது பிளாஸ்டிக் போத்தலில் இருந்த பாம்பைத் திறந்து விட்டுள்ளார்.

உத்ராவை இரண்டு முறை பாம்பு கடிப்பதைப் பார்த்தபடியே நின்றிருக்கிறார் சூரஜ். பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் தூக்கம் வராமல் கட்டிலில் அமர்ந்த சூரஜ் அதிகாலை அங்கிருந்து வெளியறி பாம்பு கொண்டு வந்த போத்தலை வெளியே வீசியுள்ளார்.

பின்னர், உத்ராவின் அம்மா அவரை எழுப்பும்போது அசைவற்றுக் கிடந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிலையில் உத்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ், தனது மனைவி உத்ராவைக் கொலை செய்தது குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், “உத்ராவிற்கு மனதளவில் சில பிரச்னைகள் இருந்தன. இதனால் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன். அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன். பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். இதற்கான பாம்பாட்டி சுரேஷின் உதவியை நாடினேன்.

முதலில் சுரேசிடமிருந்து வாங்கிய அணலி பாம்பைவிட்டு மார்ச் 2 ஆம் திகதி கடிக்கச் செய்தேன். அப்போது உத்ரா சத்தம்போட்டு அலறியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பிவிட்டார். அணலி வகை பாம்பு கடித்தால் வலி அதிகமாக இருக்கும், ஆனாலும் அவர் இறக்கவில்லை என்பதால் அடுத்தமுறை அதிக விஷம் கொண்ட கருமூர்க்கன் வகை பாம்பை வாங்கினேன். அதை பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து, பேக்கில் வைத்து உத்ராவின் வீட்டுக்குக் கடந்த 6ஆம் திகதி எடுத்துச் சென்றேன். அன்று இரவு அங்கு தூங்கினேன். அதிகாலை 2.30 மணியளவில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த உத்ராவின் மீது பாம்பு இருந்த போத்தலை வைத்து, அதன் மூடியைத் திறந்தேன். பாம்பு வெளியே வந்து உத்ராவை இரண்டு முறை கொத்தியது. அதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன்.

பின்னர், பாம்பை மீண்டும் போத்தலில் அடைக்க முயன்றேன். ஆனால், பாம்பு பீரோவின் அடியில் சென்றுவிட்டது. உத்ரா இறந்ததை உறுதிசெய்த பின்பு விடியும்வரை கட்டிலில் தூங்காமல் விழித்திருந்தேன். பொழுது புலரும் நேரத்தில் பாத்ரூம் சென்றபோது பாம்பைக் கண்டேன். உடனே, அடித்துக் கொன்றுவிட்டேன். பின்னர் வீட்டின் வெளியே வந்து பாம்பு கொண்டு சென்ற போத்தலை அருகில் புதர் மண்டிய பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வந்துவிட்டேன்” என வாக்குமூலத்தில் கூறியதாக அந்த கொடூர சூரஜ் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சூரஜை பொலிஸார் உத்ராவின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் பாம்பு கொண்டுசென்ற போத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை , சூரஜின் பெற்றோருக்கும் இந்தக் கொலையில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சூரஜின் வீட்டில் வைத்து பாம்பு இரவு 8.30 மணியளவில் கடித்ததாகவும் ஆனால் அவரை மருத்துவமனைக்கு நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உத்ராவின் சொத்துகளை அபகரித்துவிட்டு வேறு திருமணம் செய்ய சூரஜ் முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளத்தை உலுக்கிய இந்த நூதன கொலை வழக்கில் உத்ராவின் கணவர் சூரஜ் மற்றும் பாம்பை விற்பனை செய்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை நான்கு நாள்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அத்துடன் பாம்பு கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியில் இருந்தே பாம்பு பிடிக்கும் சுரே‌ஷுடன் சூரஜ் போனில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இன்று சூரஜின் பெற்றோர் மற்றும் சகோதரியிடம் பொலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

உத்ரா கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கருமூர்க்கன் பாம்பை அவரது அறையில் கண்ட உறவினர்கள் அன்றே அதனை அடித்துக் கொன்று புதைத்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக பாம்பைத் தோண்டி எடுத்து நேற்று முன்தினம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஃபாரன்சிக் நிபுணர்கள் மற்றும் மூன்று கால்நடை மருத்துவர்களும் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அது மூர்க்கன் வகை பாம்பு எனத் தெரியவந்துள்ளது.

பாம்பின் உடல் அழுகிய நிலையில் இருந்தாலும் விஷப் பல் உள்ளிட்ட வழக்குக்குத் தேவையான பாகங்கள் சேகரிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பாகங்கள் சோதனைக்காக ஃபாரன்சிக் லேப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை வழக்கில் பாம்புக்கு பிரேதப் பரிசோதனை செய்வது கேரளத்தில் இது முதன்முறை எனக் கூறப்படுகிறது.

நேற்று விசாரணைக்காக வீடு மற்றும் பாம்பு விசிறப்பட்ட இடத்திற்கு சூரஜ் அழைத்து வரப்பட்டபோது, அவரது உறவினர்கள் அங்கு கூடி, சூரஜ் நிரபராதி என கோசமெழுப்பியுள்ளனர்.

அப்போது, “நான் நிரபராதி… நான் பாம்பை பாவித்து மனைவியை கொல்லவில்லை. பொலிசாரே பாம்பை கொண்டு வந்து வைத்துவிட்டு, நான் பாம்பை பாவித்ததாக சொல்கிறார்கள்“ என சூரஜ் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

Next Post

ஜனாதிபதி , பிரதமர் உட்பட பலர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
ஜனாதிபதி , பிரதமர்  உட்பட பலர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி!

ஜனாதிபதி , பிரதமர் உட்பட பலர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025

Recent News

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy