வேலூர் சிறையில், 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் நளினியும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இருவரும் இலங்கை மற்றும் லண்டனில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினரிடம் Video Callல் பேச அனுமதி கோரினர்.
இந்த கோரிக்கை சிறைத்துறை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஜீவ சமாதி அடையப்போவதாக கூறிய முருகன் கடந்த 1ம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
தொடர்ந்து 11 நாட்களாக உண்ணாவிரதம் நீடித்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறதாம்.