ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்த நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ஸ்பெயினில் சில நாட்களாக கொரோனா இறப்பு எற்படவில்லை. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 167 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை ஸ்பெயினில் 2,42,280 பேருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27,136 பேர் பலியாகி உள்ளனர். 1,50,000 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினில் மார்ச் 14 ஆம் திகதி தொடங்கப்பட்ட ஊரடங்கு மே 4 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.
முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.