• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

பிரான்சில் கணவருடன் இருக்கும் பிரபல தமிழ் பெண்ணுக்கு நடந்த மோசமான சம்பவம்!

Editor by Editor
June 12, 2020
in உலகச் செய்திகள், பிரான்ஸ் செய்திகள்
0
பிரான்சில் கணவருடன் இருக்கும் பிரபல தமிழ் பெண்ணுக்கு நடந்த மோசமான சம்பவம்!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்சில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான திவயா, தனது கணவருடன் பிரான்சில் வசித்து வரும் நிலையில், அங்கு பயணம் மேற்கொண்ட போது, மேற்கொண்ட மோசமான அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர் திவ்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அறிமுகமனதன் மூலம் பிரபலமானார்.

அதன் பின், பின்னணிப் பாடகியான இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, வில்லு ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு ஷிபு தினகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, பிரான்ஸ் தலைநகர் பார்சில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அங்கு தங்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா பகிர்ந்துள்ளார்.

அதில், பயணப்பட விரும்பும் அனைவருக்கும் ஒரு முக்கிய குறிப்பு சொல்ல விரும்புகிறேன். சென்னையில் பல மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு நானும் என் கணவரும் முதல் விமானத்தைப் பிடித்து ஏறினோம்.

பெங்களூருவிலிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குச் செல்லும் எங்கள் அடுத்த விமானத்துக்காக 5 மணி நேரம் காத்திருந்தோம். (சர்வதேச விமான நிலையத்தில் விமானம் புறப்பட 3 மணி நேரம் முன்னதாகத்தான் உள்ளே விடுவார்கள்). எனவே எங்கள் 5 பைகளோடு விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தோம்.

அதன் பிறகு பெங்களூருவிலிருந்து பாரிஸுக்கு பயணப்பட விமானத்தில் ஏறினோம். அந்தப் பயணத்தில் நாங்கள் முழுவதும் தூங்கியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் கடந்த 30 மணி நேரங்களில் நடந்த ஒரே நல்ல விஷயம் அதுதான்.


நாங்கள் பாரிஸ் சென்று இறங்கினோம். விமான நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல அங்கிருக்கும் டாக்ஸியில் சென்றோம்.

எங்கள் வீட்டுக்குச் செல்லும் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பாகவே நாங்கள் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டோம்.

இதனால், எங்கள் பயண மூட்டைகளை அங்கிருக்கும் லாக்கர் ரூமில் வைத்துவிட்டுச் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம்.

எங்களின் நான்கு பெரிய பெட்டிகள், ஒரு லேப்டாப் ட்ராலி என அனைத்தையும் என் பொறுப்பில் விட்டுவிட்டு என் கணவர் லாக்கர் ரூமைத் தேடிச் சென்றார்.

அப்போது ஒருவர் என்னை அணுகி, எனக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டார். (இங்கு பலருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் இது பொதுவான கேள்வியே). நான் அவரிடம் ஆமாம் என்றேன்.

என் வாயில் நுழையாத ஒரு நகரத்தின் பெயரைக் கூறி, அதற்கு எந்த ரயில் என்று கேட்டார். நான் தெரியாது என்றேன்

ஆனால், தொடர்ந்து ஒரு நிமிடம் என்னுடன் விடாப்பிடியாகப் பேசிக்கொண்டிருந்தார். தனது மொபைலைக் காட்டி வழி கேட்டார். எனக்குத் தெரியாது,

நீங்கள் ரயில் நிலையத்தில் இருக்கும் உதவி மையத்தைக் கேளுங்கள் என்று நான் சொன்னதும் அவர் நன்றி சொல்லிவிட்டு நடந்து சென்றார்.

இதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா, அடுத்த நிமிடம் நான் திரும்பிப் பார்க்கும்போது எங்களின் ஒரு பெட்டியும், லேப்டாப் பையும் காணவில்லை.

எங்கள் இருவரின் பாஸ்போர்ட், இரண்டு லேப்டாப், எங்கள் சார்ஜர்கள், ஐபேட், போஸ் ஹெட்போன் உள்ளிட்ட மேலும் 2 ஹெட்போன்கள், ஒரு ஏர்பாட், கணவரின் திருமண உடை இதோடு நிறைய உடைகள், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் என அனைத்தையும் பறிகொடுத்தோம்.

உடனடியாக இரயில் நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கார் செய்தோம். ஆனால் அவர்கள் இதைத் தீவிரமாகவே எடுத்துக் கொள்ளாமல் காவல் நிலையம் செல்லச் சொன்னார்கள்.

நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்றால் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி, மன்னிக்கவும், நாங்கள் மூடிவிட்டோம், வேறு நிலையத்துக்குச் செல்லுங்கள் என்றார்.

எனவே நாங்கள் இன்னும் 15 நிமிடங்கள் நடந்து அடுத்த காவல் நிலையத்துக்குச் சென்றால், அங்கிருந்து இன்னொரு காவல் நிலையம் என்றார்கள்.

மேலும் 15 நிமிடம் நடந்து மூன்றாவது காவல் நிலையத்துக்குச் சென்றோம். அங்கு எங்களைக் காத்திருக்கச் சொன்னார்கள்.

ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல எங்களை நடத்தினார்கள். இரண்டு மணி நேரம், காவல் நிலையத்துக்கு வெளியே, வெயிலில் நாங்கள் காத்திருந்தோம்.

பின் 2 மணி நேரம் உள்ளே காத்திருந்தோம். 4 மணி நேரத்துக்குப் பிறகு, பல நூறு முறை என்ன ஆனது என்று கேட்ட பிறகு எங்கள் புகாரை எடுத்துக் கொண்டார்கள்.

எங்களிடம் எதுவுமே கேட்கவில்லை, எந்த விவரமும் கோரவில்லை. திருடுபோன பெட்டியில் என்ன இருந்தது என்று கேட்டு காப்பீடு கோரலாம் என்றார்கள்.

திருடிய நபரைப் பிடிக்க மாட்டீர்களா, நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மேலே இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்க்க முடியாதா என்று கேட்டபோது அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி நான் ஏதோ நகைச்சுவை சொன்னதைப் போல என்னைப் பார்த்துச் சிரித்தார்.

வீட்டுக்குத் திரும்ப நாங்கள் பயணப்பட வேண்டிய ரயிலை, காவல் நிலையத்திலிருந்த 4 மணி நேரத்தில் நாங்கள் தவற விட்டோம். காத்திருந்து புதிதாக டிக்கெட் பதிவு செய்தோம்.

வீடு திரும்ப ஒன்றரை நாள் ஆனதோடு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் திருடு போயின. வீடு திரும்ப இரயில் ஏறினோம்.

இந்த நொடியில் நான் எவ்வளவு நொறுங்கிப் போயிருக்கிறேன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால் என் கணவர் இப்போது வரையிலும் அமைதியாக, புன்னகைத்துக் கொண்டு இருக்கிறார்.

அவரது பல வருட உழைப்பு திருடப்பட்ட லேப்டாப்பில் இருந்தது. அவரது முக்கியமான ஆவணங்கள், கருவிகள் என அனைத்தும் போய்விட்டன. இந்த நிலையிலும் பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

எனவே பயணப்பட விரும்புபவர்களுக்கு என் அறிவுரை, கவனமாக, கவனமாக, கவனமாக இருங்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

ஏனென்றால் வெளியில் சில மனிதர்களுக்கு எந்த கொள்கைகளும், உணர்ச்சிகளும் இல்லை. மற்றவர்களின் இழப்பு குறித்து, காயம் குறித்துக் கவலையில்லை.

ஒரு வழியாக வீடு திரும்பினோம். அக்கறை காட்டிய, எங்களுக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 27 வயது இளைஞன்!

Next Post

வீட்டில் இருந்த 21 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
வீட்டில் இருந்த 21 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

வீட்டில் இருந்த 21 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025

Recent News

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy