• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Editor by Editor
July 12, 2020
in இலங்கைச் செய்திகள்
0
பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

அங்குலன, லுனாவ பகுதியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேரில் சென்று, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த பொலிசார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நேற்று அதிகால 12.20 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 4 பிள்ளைகளின் தந்தையான அமித் கருணாரத்ன (39) என்வரே கொல்லப்பட்டிருந்தார். மீனவரான அவரும், ஏனைய 3 மீனவர்களும், மீன்பிடிக்க செல்வதற்காக 2 முச்சக்கர வண்டியில் கடற்கரைக்கு சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

லுனாவ பாலம் அருகே பொலிசார் சிலர் திடீர் வீதித்தடை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.

பொலிசார் மற்றும் சாட்சிகளின் கூற்றுப்படி, வாகன வருமானவரி பத்திரத்தை சரிபார்க்க முயன்றபோது பாதிக்கப்பட்டவருக்கும் பொலிஸ்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உயிரிழந்தவர் ஒரு அதிகாரியை கல்லால் தாக்க முயன்றதாகவும், இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் சுட நேர்ந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக குறைந்தது 4 சாட்சிகள் இருப்பதாக, அவர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசினர். அவர்களின் கூற்றுப்படி, பொலிசாருடனான வாதத்தின் பின், அவர் அங்கிருந்து வெளியேற திரும்பியபோது பொலிசாரின் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து, பிரதேசவாசிகள் கோபமடைந்து அந்த பகுதியில் குவிந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதைடுத்து அங்குலான பொலிஸ் நிலையத்தை சுற்றி கலகமடக்கும் பொலிசார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை.

பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஈடுபட்டார். நேற்று மாலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உயிரிழந்தவரின் வீட்டுக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடக்குமென உறுதியளித்தார். விசாரணையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரி குற்றமிழைத்தது கண்டறியப்பட்டால் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உயிரிழந்தவரின் மகனொருவர், தனது தந்தை பொலிஸ் அதிகாரியொருவரால் இழிவுபடுத்தப்பட்டதாகவும், அவரது வார்த்தைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, தந்தை தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் வருமானத்திலேயே குடும்பம் தங்கியிருந்ததாகவும், தமக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். சம்பவத்திற்கு நீதி வழங்கப்படும் என தேசபந்து தென்னக்கோன் மீள உறுதியளித்தார்.

அந்த பகுதிகளிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் சட்டவிரோத குழுக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களை தூண்டி விட முயல்வதாக தெரிவித்த தேசபந்து தென்னக்கோன், அப்படியானவர்களின் வலையில் விழாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி உறவினர்களையும் விழிப்பூட்டும்படி குடும்பத்தினரை கேட்டுக் கொண்டார்.

அத்துடன், உயிரிழந்தவரின் சிறுவர்களின் நலன்களை பொலிசார் கவனிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Previous Post

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாழும்போதே ராஜ வாழ்க்கையை வாழும் அதிர்ஷ்டம் இருக்காம்!

Next Post

பிள்ளையானின் பிரச்சார மேடையில் பெளத்த துறவிகள்!

Editor

Editor

Related Posts

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
Next Post
பிள்ளையானின் பிரச்சார மேடையில் பெளத்த துறவிகள்!

பிள்ளையானின் பிரச்சார மேடையில் பெளத்த துறவிகள்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025

Recent News

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy