பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் நோக்கம் நாட்டை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதாகும்.
மேலும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் மோசடிகள் இல்லாத ஒரு நாட்டை உறுதி செய்வதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இது போன்ற தீங்கு விளைவிக்கும் விடயங்களிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்றவே ஜனாதிபதி விரும்புகிறார் என்றும், தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்த நாடாக இலங்கை இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




















