தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த கொடிய தொற்று மூலம் நாளுக்கு நாள் சிலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அர்ச்சனா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக, அவரது உடலை அடக்கம் செய்ய நவல்பூர் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் அர்ச்சனாவின் குடும்பத்தினர் முயன்றுள்ளனர்.
ஆனால், கொரோனா தொற்று மூலம் செவிலியர் உயிரிழந்ததன் காரணமாக, அப்பகுதி பொது மக்கள் அவரது உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, கடந்த இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உடலை அடக்கம் செய்ய முடியாமல் செவிலியர் அர்ச்சனாவின் குடும்பத்தினர் பரிதவித்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/Thondainadu/status/1290249319669305348



















