பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மையுடைய வைரசாக கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 03 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடமிருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காதென மலேசிய பொது சுகாதார பணிப்பாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காதென்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தற்போது சோதனைக் கட்டத்திலிருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காதென மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















