ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஐக்கியதேசியக்கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் நேற்று இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமை வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க தடையாக இருக்கமாட்டார் என்றும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தின் போது ஐக்கிய தேசியக்கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்ற குறைபாடே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுக்க முடியாமைக்கான காரணம் என்று விஜேயவர்த்தன குறிப்பிட்டார்.
சஹ்ரான் ஹாசிம் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானபோதும் அது தொடர்பான தகவல்கள் தமது அரசாங்க காலத்தில் கிடைத்திருக்கவில்லை என்று ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.