கேரள மாநிலத்தில் பதனம் திட்டா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் எவரும் இல்லாத காரணத்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு கொரோனா பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் தகாத வேலையில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் பயத்தில் உறைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு சென்ற உடன் மருத்துவ ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அந்த பெண் நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கொரோனாவால் அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வார்டில் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். இருப்பினும், கதவை உடைத்துக்கொண்டு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.