புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆம்பூர் சாலையில் இருக்கும் தங்கு விடுதி அருகே, கடந்த 14 ஆம் தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி பிணமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், அவர் வாகன விபத்தில் இறக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், சந்தேகத்திற்கு இடமாக மற்றொரு வாகனம் நிற்கவே, அந்த வாகனத்தின் பதிவெண் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சார்ந்த ஐயப்பன் (வயது 45) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தனர்.