ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டம் கொம்பாகேரா கிராமத்தில், கடந்த நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த சம்பவத்தில் சூனியக்காரி என்ற ஒரு பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் பஞ்சாயத்திற்கு, அழைத்து வரப்பட்டு உள்ளார்.
அங்கு அவர் மீது மந்திர பயிற்சியின் மூலமாக கிராமவாசி ஒருவர் மரணத்திற்கு இவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு தண்டனையாகவே அவரை மொட்டையடித்து நிர்வாணமாக அழைத்து வந்துள்ளனர். அதோடு அவருக்கு ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஆறு பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2000-மாவது ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் உருவானதில் இருந்து, இன்று வரை ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு பேர், சூனியம் வைப்பவர்கள் இன்று சந்தேகத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏராளமான பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.