பிரிட்டனில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாகியதைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பேசியபோது தெரிவித்துள்ளதாவது
“இது எளிதாக இருக்கப் போவதில்லை என்பது எமக்கு நன்கு தெரியும். வைரஸ் பரவுவதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களால் முயன்றால் வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள்.
மதுபானசாலைகள், உணவு விடுதிகள், பிற வியாபாரநிலையங்கள் 10 மணிக்கு மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.