• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!!

Editor by Editor
October 9, 2020
in கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள்
0
பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பேர்ஸ்டோ, வோர்னரின் அதிரடி பாட்னர்ஷிப், ரஷித் கானின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்களுக்குக் ஆட்டமிழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக 200 ரன்களை நேற்று கடந்தது. ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாக சன்ரைசர்ஸ் வெற்றி பார்க்கப்படுகிறது.

வோர்னர், பேர்ஸ்டோ கூட்டணி 160 ரன்கள் சேர்த்துப் பிரி்ந்தனர். இந்த ஐபிஎல் தொடரில் தொடக்கக் கூட்டணி 150 ரன்களைக் கடப்பது இது 2வது முறையாகும்.

இதற்கு முன் சிஎஸ்கேவின் டூப்பிளசிஸ், வட்ஸன் ஜோடி பஞ்சாப்பை பதம் பார்த்து 10 விக்கெட்டில் வெற்றி பெற வைத்தனர், இப்போது வோர்னரும், பேர்ஸ்டோவும் அதே பஞ்சாப் அணிக்கு எதிராக முத்திரை பதித்துவிட்டார்கள்.

அதிரடியாக ஆடிய வோர்னர் 52 ரன்களும் (40 பந்து ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி), பேர்ஸ்டோ 97 ரன்கள் (55 பந்துகள் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்) சேர்த்து வெற்றிக்கு முத்தாய்ப்பாக இருந்தனர். 97 ரன்கள் சேர்த்த பேர்ஸ்டோ மீண்டும் ஃபோர்முக்கு வந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

பஞ்சாப் அணியில் போராடிய நிகோலஸ் பூரன், 17 பந்துகளில்அரைசதம் அடித்து நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன் ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர் சஞ்சு சாம்ஸன் 19 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் தொடர்ந்து 4வது தோல்வியைச் சந்திக்கிறது. ஒரு வெற்றி, 5 தோல்விகள், என 2 புள்ளிகளுடன் 8வது இடத்தில் பஞ்சாப் அணி இருக்கிறது.

கடந்த 3 போட்டிகளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றிக்கு அருகே வந்து சில ரன்களில் தோல்வி அடைந்தது. அதேபோலத்தான் இந்தப் போட்டியிலும் நடந்தது. 10 ஓவர்கள் வரை பஞ்சாப் அணியின் ரன்ரேட் அருமையாக இருந்தது. ஆனால், அடுத்த 6 ஓவர்களில் ஆட்டமே முடிந்துவிட்டது.

105 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி அடுத்த 27 ரன்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமான தோல்வியைச் சந்தித்து.

ரஷித் கான் துணை

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பேர்ஸ்டோ, வோர்னரின் துடுப்பாட்டம் எந்த அளவு முக்கியக் காரணமோ, அதைபோல, பந்துவீச்சாளர்களும் போட்டியை விரைவாக முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். குறிப்பாக ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் வீரர்களை மிரளவிட்டார். முக்கியப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இல்லாத நிலையில் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் சுருட்டியிருப்பது பாராட்டுக்குரியது

கலீல் அகமது, நடராஜன் இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 6 ரன்ரேட் வீதம் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வழக்கமாக 5 முதல் 6 பந்துவீச்சாளர்களைக் கையாளும் கப்டன் வோர்னர் நேற்று 4 பந்துவீச்சாளர்களை வைத்தே பஞ்சாப் அணியின் கதையை முடித்துவிட்டார்.

அதிரடிக் கூட்டணி

துடுப்பாட்டத்தில் வோர்னர், பேர்ஸ்டோ கூட்டணி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக இருவரும் அடித்த அடியை யாரும் மறந்திருக்க முடியாது. அதே மீண்டும் நினைவுபடுத்தினர். வோர்னர் ஐபிஎல் தொடரில் தனது 50வது அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரும் ஆட்டமிழந்தபின் சன்ரைசர்ஸ் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் மளமளவென சரிந்தனர்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியில் வோர்னர், பேர்ஸ்டோ, வில்லியம்ஸன் தவிர்த்து நடுவரிசையில் நிலையாக ஆடக்கூடிய வீரர்கள் இல்லை என்பது நேற்று வெளிப்பட்டுவிட்டது.

இதேபோன்ற பலவீனம்தான் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் இருக்கிறது. ராகுல், அகர்வால் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் பெரிய சறுக்கல் விழுந்தது. பூரன் எடுத்து நிலைநிறுத்தியும், அவருக்கு கைகோர்த்து ஆட ஸ்திரமான வீரர்கள் இல்லை.

இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும். ராகுல், அகர்வாலை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டால், அடுத்த சிறிது நேரத்தில் பஞ்சாப் அணியின் கதை முடிந்தவிடும் என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.

இந்தப் போட்டியில் ஒரே ஆறுதல் பூரன் 77 ரன்கள் (37பந்துகள், 7 சிக்ஸர், 5 பவுண்டரி) சேர்த்ததுதான். இந்த ஐபிஎல் சீசனில் விரைவான அரைசதத்தை 17 பந்துகளில் எட்டினார். பூரனின் துடுப்பாட்டம் மட்டும்தான் ஆறுதல். பூரனின் 77 ரன்கள் தவிர்த்து அணியில் அதிகபட்ச ரன்கள் 11 என்பது வேதனைக்குரியது.

ஆடுகளம் நேற்று வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்து நன்றாக எழும்பி வந்தது. ஆனால் லைன்-லென்த்தில் பந்துவீசாமல் ஷோர்ட் பிட்சாக பெரும்பாலும் வீசி பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்கள் பேர்ஸ்டோ, வோர்னரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டனர்.

மோசமான பந்துவீச்சு

பஞ்சாப் அணியில் 6 பந்துவீச்சாளர்களில் பிஸ்னோய் தவிர மற்ற 5 பேரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசவில்லை, ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.
15 ஓவர்கள் வரை பேர்ஸ்டோ, வோர்னர் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள், கடைசி 5 ஓவர்களில் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டை வீழ்த்தியும் பயனில்லை. ஒட்டுமொத்தத்தில் பஞ்சாப் அணி பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் நம்பிக்கையிழந்து விட்டது.

விக்கெட் சரிவு

202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன்தான் பஞ்சாப் அணி களமிறங்கியது. 200 ரன்களை தொட்டுவிட்டாலே அது கடினம் என்று சேஸிங் அணிக்கு தெரிந்து அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அதிரடியான தொடக்கத்தை அளித்துவரும் அகர்வால், ராகுல் கூட்டணி தங்கள் திட்டத்தை சரியாகத்தான் செயல்படுத்தி அதிரடியாகத் தொடங்கினர். ஆனால் ரன் சேர்க்க வேண்டிய அழுத்தம் விரைவாக விக்கெட்டுகளை இழக்க வைத்தது.

2வது ஓவரில் அகர்வாலை 9 ரன்னில் வோர்னர் ரன்அவுட் செய்தார். அடுத்த வந்த சிம்ரன் சிங் 11 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் வெளியேறினார். ராகுல் 11 ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் வெளியேறினார். 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் அணி.

4வது விக்கெட்டுக்கு பூரன், மக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். மக்ஸ்வெல் நிதானமாக ஆட, பூரன் வெளுத்து வாங்கினார். அதிலும் சமத் பந்துவீ்ச்சில் 4 சிக்ஸர்,ஒருபவுண்டரி என 28 ரன்கள் சேர்த்தார். 17 பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்கோரை உயர்த்தி நம்பிக்கை அளித்தார்.

10.3 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களைக் கடந்து நம்பிக்கையளித்தது. ஆனால், 11வது ஓவரில் மக்ஸ்வெல் 7 ரன்னில் கார்க்கால் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்த விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. பல கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட மக்ஸ்வெல் 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட 15 ரன்களைத் தாண்டவில்லை என்பது வேதனை.

நம்பிக்கை அளித்தவந்த பூரன் 77 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் வெளியேறியவுடன் பஞ்சாப் தோல்வி உறுதியானது. அதன்பின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரியத்தொடங்கின.

மன்தீப்சிங்(6), முஜிபுர் ரஹ்மான்(1), ஷமி, காட்ரெல், அர்ஸ்தீப் சிங் டக்அவுட் என வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். 105 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி அடுத்த 27 ரன்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

16.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு பஞ்சாப் அணி ஆட்டமிழந்து 69ரன்னில் தோல்வி அடைந்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, நடராஜன் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

வலுவான தொடக்கம்

முன்னதாக ரொஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி துடுப்பாட்டம் செய்தது. வோர்னர், பேர்ஸ்டோ அருமையான தொடக்கத்தை அளி்த்தனர். அணியின் ஸ்கோர் 200 ரன்களை எட்ட வேண்டும் என்ற தீர்மானத்தோடு விளையாடியதால், ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சென்றுகொண்டே இருந்தது.

இருவரையும் பிரிக்க ராகுல் பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலனில்லை.எபவர்ப்ளேயில் 58ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ்.

ஆடுகளம் ஓரளவுக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தும் அதை ஷமி, காட்ரெல் பயன்படுத்தவில்லை. இருவரும் சேர்ந்து பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்துவாங்கினர். 28 பந்துகளில் பேர்ஸ்டோ அரைசதம் அடித்தார். வோர்னர், 37பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் பாட்னர்ஷிப் 150 ரன்களைக் கடந்து சென்றது.

நிதானமாக ஆடிய வார்னர் 52 ரன்னில் பிஸ்னோய் வீசிய 16வது ஓவரில் மக்ஸ்வெலிடம் கட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். முதல்விக்கெட்டுக்கு இருவரும் 160 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

சதத்தை நெருங்கிய பேர்ஸ்டோ 97 ரன்னில் (55 பந்து, 6 சிக்ஸர், 7 பவுண்டரி) பிஸ்னோய் பந்துவீச்சில் அதே ஓவரில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அதன்பின் பந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். மணிஷ் பாண்டே ஒரு ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் அவரிடமே கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கார்க் டக்அவுட்டிலும், அபிஷேக் சர்மா 12ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்

200 ரன்களை சன்ரைசர்ஸ் தொடுமா என எதிர்பார்க்கப்பட்டபோது, வில்லியம்ஸன் கடைசி ஓவரில் அதிரடியான ஷொட்களை ஆடினார். இறுதியில் வில்லியம்ஸன் 20 ரன்னிலும், ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர் 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து.

பஞ்சாப் தரப்பில் பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

Previous Post

வார இறுதியில் நாடு லொக் டவுன் செய்யப்படுமா? ஷவேந்திர சில்வாவின் பதில் என்ன ??

Next Post

திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத்தம்பதி!

Editor

Editor

Related Posts

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!
கிரிக்கெட்

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!

October 4, 2025
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று
கிரிக்கெட்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று

October 2, 2025
ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

September 29, 2025
இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!

September 24, 2025
மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!
கிரிக்கெட்

மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!

September 23, 2025
ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கிரிக்கெட்

ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!

September 20, 2025
Next Post
திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத்தம்பதி!

திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத்தம்பதி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025

Recent News

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy