யாழ்ப்பாண யுவதியொருவரின் காதலர்கள் இருவர் ஒரே நேரத்தில் யுவதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. யாழ் புறநகரிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி நிறுவனமொன்றின் மாணவியொருவர், தமது பிரதேசத்தை சேர்ந்த பிறிதொரு உயர்கல்வி நிறுவனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். சில காலமாக இந்த காதல் தொடர்பு இருந்து வந்த நிலையில், யுவதி தன்னுடன் கூட படிக்கும் கிளிநொச்சி பகுதி இளைஞன் ஒருவருடனும் காதல் தொடர்பை அண்மை நாட்களாக பேணியுள்ளார். சொல்லப் போனால் 2 காதலர்களை அட்ட டைமில் மெயின்டேட் பண்ணி இருக்கிறார்.
இதே நேரம் வவுனியா இளைஞர்(புதிய காதலன்) இவர் உணவு அருந்திக் கொண்டு இருந்தவேளை. இதனை பார்த்த 2வது காதலனின் நண்பர்கள் 2ம் காதலனுக்கு போனை போட. அங்கே தனது நண்பர்கள் சகிதம் வந்த 2ம் காதலன் , புதிய காதலை அடித்து உதைத்துள்ளார்.
ரகளை உச்ச கட்டத்தை எட்டியது. உணவக பணியாளர்கள் மற்றும் உணவருந்த வந்த சிலர் ஒன்று சேர்ந்து பழைய காதலனையும், நண்பர்களையும் பிடித்து வெளியேற்றினர். இந்த ரகளையில் உணவு மேசையிலிருந்த கண்ணாடி உணவு தட்டு, தண்ணீர் குவளைகளும் விழுந்து உடைந்தன. அவற்றிற்கான பணத்தை யுவதியும், புதிய காதலனும் செலுத்தி விட்டு, அவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.