நீர்கொழும்பில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்திருப்பதாக நீர்கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் எச்.கே.யு.கே. குணரத்ன தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையைில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டியிருந்தனர்.
இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நீர்கொழும்பைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றாளர்களாக நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நீர்கொழும்பில் 31 ஆக அதிகரித்துள்ளது.
குடாநாடு கனத்த வீதி மற்றும் லூவிஸ் பிளேஸ் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.