சட்டவிரோத உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் 5பேரை திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் இன்று அதிகாலை அம்பாறையிலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து கைத செய்யப்பாட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 5 உள்ளூர் துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
திருக்கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் உள்ளூர் சட்டவிரோத துப்பாக்கிகளை மறைத்துவைக்கப்பட்டுள்ளன என பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையிலான பொலிஸ் குழு இன்று அதிகாலை விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சாரம்குடா பிரதேசத்திலுள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போதே, மறைத்துவைக்கப்பட்ட உள்ளூர் சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டுள்ளதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.