மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவைகளை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
கொவிட் – 19 வைரஸ் காரணமாக நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி அலுவலகம் மற்றும் வெரஹெர அலுவலகம் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவாகம் ஆகியனவும் பொது மக்களுக்காக திறக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.