மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு நாளை(29) நள்ளரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்த ஊரடங்குச் சட்டம் தற்காலிகமானதே. இது எதிர்வரும் திங்கட் கிழமையுடன் நிறைவு செய்யப்படும்.
எனவே யாரும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டாம். ஊரடங்கு அமுலில் இருக்கும் 3 தினங்களுக்கும் இங்கேயே தங்கி இருக்கவும்.
மேல்மாகாணத்தில் இருக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதனால் வெளி மாவட்டங்களிலும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றார்.



















